Wednesday, July 14, 2010

நான் ரசித்த காதல் கவிதைகள்

என்னுடையது என்று நினைத்துத்தான்

இதுவரையில் வளர்த்து வந்தேன்.

ஆனால் முதல்முறை உன்னைப் பார்த்ததுமே

பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நா
ய்க்குட்டி மாதிரி

உன் பின்னால் ஓடுகிறதே இந்த மனசு.

* துடிப்பதைவிட
உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக
இருக்கிறது என் இதயத்திற்கு

* எனது இரண்டு
தோள்களுக்கும் இடையே

பெரும் சண்டை நடக்கிறது உன்னால்

“என்னாலா . . . என்ன சண்டை?” எனது எந்தத் தோளில்

நீ முதலில் சா
ய்வாய் என்கிற பந்தயச்
சண்டை

* எல்லோரையும்
பார்க்க ஒரு பார்வையென்றும்

என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும் வைத்திருக்கிறாய்.

* 'நீ ரொம்ப
அழகானவள்' என்று நண்பர்கள்
சொல்வதெல்லாம்
உண்மையா பொய்யா
என்று உன்
முகத்தைப் பார்த்து உறுதி செய்து
கொள்கிற நேரம்கூட
உன்னை நான்
பார்த்ததில்லை.
பார்க்கவிட்டால்தானே
உன் கண்கள்.

* என்னிடம் பரிசுப்
பொருளாக ஒரு
ரோஜாவைக் கேட்கிறது
உன் மௌனம்.
ஆனால் உன்னைக்
காதலிக்க
ஆரம்பித்தபோதே
பூக்களையும் நேசிக்க
ஆரம்பித்துவிட்டது
மனசு. எப்படிப் பறிப்பேன்
ஒரு ரோஜாவை.

* இவை இப்படித்தான்
என்று நான்

நினைத்துக்கொண்டிருப்பவற்றைக் கூட
எவ்வளவு சுலபமாய்
நீ பொய்யாக்கி
விடுகிறாய்.
உதிர்வதென்பது எப்போதும்
சோகமானதுதான்
என்கிற என் நினைப்பை
உன் உதட்டிலிருந்து
உதிர்கிற ஒரு சின்னப்
புன்னகை
பொய்யாக்கிவிடுகிறதே.

* ஒரு கார்த்திகை
இரவில் அகல்
விளக்குகளுக்கு
நடுவே நிற்கும் உன்னைப்
பார்த்த பிறகு ...
உன்னைக் காதலிக்கவே
பயமாய் இருக்கிறது.

No comments:

Post a Comment